மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அரசு ஜாக்பாட் அறிவிப்பு!
இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டது. அதை தொடர்ச்சியாக மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி உயர்வும் அளித்தது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். அதனை தொடர்ந்து தற்போது 2022ம் ஆண்டில் மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை தொகையை ஒரே தவணையில் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டு தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தை போல பிற மாநிங்களிலும் 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. மாசலப் பிரதேச மாநில அரசு தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஆணையை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசும் தற்போது 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அரசு ஊழியர் பணி இடைநீக்கம்!
இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 2.25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அரசுக்கு ரூ.6,000 கோடி வரையில் செலவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசுகளும் சம்பள உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளது.