மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு – முழு விவரம் இதோ!
தற்போது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 31% ஆக உயர்த்தி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியை (DA) உயர்த்தி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தற்போது அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
IPL 2022 தொடர் குறித்த சிறப்பு தொகுப்பு – முழு விவரங்கள் இதோ!
இப்போது 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசாங்கம் சமீபத்தில் புதிய ஊதிய விகிதத்தை அறிவித்தது. இதன் மூலம் 2,25,000 ஊழியர்கள் பயனடைவார்கள். அதே நேரத்தில் அரசின் கருவூலத்திற்கு ரூ.6,000 கோடி பணச்சுமை ஏற்படும். இதற்கிடையில் பழைய ஊதிய விகிதத்தில் சில முரண்பாடுகள் இருப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது சில ஊழியர்களுக்கு உகந்த பலன்களைப் பெற மறுக்கும்.
சென்னை: சவரனுக்கு ரூ.328 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
எனவே புதிய அளவுகோலின் கீழ் புதிய ஊதிய விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய ஊதிய விகிதத்தின் பலன்களை எந்தப் பிரிவினரும் பெற முடியாவிட்டால், இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பஞ்சாப் மாநில அரசும் தனது 1,75,000 ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநில கருவூலத்தில் 2,000 கோடி ரூபாய் பணச்சுமையை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.