அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? யாருக்கு எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கும் – முழு விவரம் உள்ளே!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வீதம் அகவிலைப்படி உயர்வு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி கணிக்கப்படுகிறது. முன்னதாக கொரோனா கால பொருளாதார சிக்கல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதேபோல், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிவாரணமும் வழங்கப்படாமல் இருந்தது.
பின்னர், மெல்ல மெல்ல நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் வழக்கம் போல் சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், இறுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வந்தார்கள். 2022 ஜூலை தவணைக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்தது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? புதிய விதிமுறைகள் இதோ!
Exams Daily Mobile App Download
அப்போது தற்போதைய தவணைக்கான அகவிலைப்படி உயர்வை 4% உயர்த்தி மொத்தம் 38% ஆக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் இருக்கும். அதவாது, அடிப்படை ஊதியம் 25,000 ரூபாய் பெரும் நபருக்கு 38% DA உயர்வால் 8,500 ரூபாய் அகவிலைப்படி வழங்கப்படும். இதேபோல், அதிகபட்சமாக, 65,000 ரூபாய் ஊதியம் பெறுபவர்களுக்கு 24,700 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்