மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு – புத்தாண்டில் நற்செய்தி?
மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி முதல் அகவிலைப்படியைப் பெற்ற பிறகு HRA மற்றும் TA ஆகிய உயர்வுக்கு பிறகு தற்போது புதிய ஆண்டிற்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை 1 வரை அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. மேலும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் ஜூலை 1, 2021 வரை அதிகரிக்காது என்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த முடிவின் காரணமாக, 2021-2022 நிதியாண்டில் மொத்தம் ரூ .37000 கோடி அரசு சேமித்துள்ளது. இருப்பினும் ஜனவரி 1 முதல் நிலுவை தொகையும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நிலுவை தொகை வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வர இருக்கும் 2022 ஆம் ஆண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசாங்கம் உயர்த்த முடியும்.
பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2.0 திட்டம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
ஆதாரங்களின் படி ஆண்டின் தொடக்கத்தில் மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கலாம். மேலும் ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்புடன், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துள்ளன. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1, 2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டர் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Office இன் மாதாந்திர சேமிப்பு திட்டம் – 6.6% வரை வட்டி! முழு விபரம் இதோ!
இதற்கு பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் உயரும். இது நடந்தால் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படும். அதாவது இதுவரை 18000 ரூபாய் பெற்ற சம்பளம் 26000 ரூபாயாக உயரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டருக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும். வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அதை பட்ஜெட் செலவினத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தால் பட்ஜெட் வரைவில் இதைச் சேர்க்க தேவையில்லை. இவ்வாறு ஃபிட்மென்ட் பேக்டர் அங்கீகரிக்கப்பட்டால் ஊழியர்களின் சம்பளத்தில் அதிரடி உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.