மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தாக்கம் காரணமாக, தள்ளி வைக்கப்பட்டு இருந்த சலுகை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான DA 3% அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் அறிவிப்பு:
இந்திய அரசாங்கத்தின் அனைத்து சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளுக்கு சம்பள மாற்றங்களை செய்ய, அரசு ஊழியர்களுக்காக 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, வீடு வாடகை படி உயர்வு என அணைத்து சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
IPL அப்டேட்ஸ் – சுரேஷ் ரெய்னா முதல் தினேஷ் கார்த்திக் வரை! விற்பனையாகாமல் போக வாய்ப்புள்ள வீரர்கள்!
இருப்பினும் தற்போது நிலைமை சீராகி வருவதால் அரசு ஊழியர்களுக்கான சலுகை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 31% உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக நடப்பு ஆண்டு DA 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் எதிர்பார்த்ததைப் போல் டிஏ அதிகரிப்பு இருந்தால் மொத்தம் 34% ஆக DA அதிகரிப்பு ஆகும்.
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
அவ்வகையில் புதிய டிஏ விகிதம் 34% இருந்து அடிப்படை சம்பளம் ரூ.18000 உள்ளவர்களுக்கு, மாதம் ரூ.6120 கிடைக்கும். இதனை தொடர்ந்து புதிய டிஏ விகிதம் 34% இருந்து ,அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900 உள்ளவருக்கு மாதம் ரூ.19346 கிடைக்கும் . மேலும் 2022ல் சம்பள உயர்வை தொடர்ந்து , பதவி உயர்வும் இருக்கலாம் என ஊழியர்கள் சார்பில் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.