மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! அரசு எடுக்கப்போகும் முடிவு?
ஆந்திர மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாததால் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரம்மாண்ட பேரணி:
ஆந்திர மாநிலத்தில் அண்மையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறிப்பிடப்படவில்லை. இதற்கு பதிலாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிட்மெண்ட் காரணி என்பதை உயர்த்தி உள்ளது. இதில் 23 சதவிகிதம் உயர்த்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்காது என்று ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு இடைவேளைக்கு தட்டு, டம்ளர்!
அத்துடன் தற்போது அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படும் என்று முதல்வர் கூறிய நிலையில் இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாததால் ஊழியர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்தனர். அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காமல் இருப்பதால் இன்று அரசு ஊழியர்கள் ‘சலோ விஜயவாடா’ என்ற மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தி வருகின்றனர்.
IPL க்கு முன், IPL க்கு பின் – இரு கட்டமாக நடத்தப்படும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்!
இந்த போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன்படி நகரின் புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை கைது செய்ய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் இந்த போராட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.