மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 3% DA உயர்வு மூலம் சம்பள அதிகரிப்பு! கணக்கீடு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - 3% DA உயர்வு மூலம் சம்பள அதிகரிப்பு! கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - 3% DA உயர்வு மூலம் சம்பள அதிகரிப்பு! கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 3% DA உயர்வு மூலம் சம்பள அதிகரிப்பு! கணக்கீடு விவரங்கள் இதோ!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) தொகை 3% முதல் 34% வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஊதியமும் கணிசமாக உயர்வடைய வாய்ப்புகள் இருக்கிறது. இது தொடர்பான கணக்கீடு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சம்பள உயர்வு

அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஈடுகட்ட சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) தொகையை 3% முதல் 34% வரை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் தவணையாக DA மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DR தொகையை ஜனவரி 1, 2022 முதல் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 31% ஐ விட 3% அதிகரிப்பை குறிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு! அமைச்சரவை ஒப்புதல்!

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில், மத்திய அமைச்சரவை 3 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்தியது. இது ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வந்தது. அதற்கு முன், ஜூலையில், அரசாங்கம் அகவிலைப்படியை மீட்டெடுத்து, DA கொடுப்பனவு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள DA தொகை 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி ஏற்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடியாக இருக்கும். அதே நேரத்தில் இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி தொகை நகர்ப்புற அல்லது கிராமப்புறத் துறைகளில் பணிபுரிபவர்களைப் பொறுத்து மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது.

DA கணக்கீடு:

ஒரு மத்திய அரசு ஊழியர் மாதம் 18,000 ரூபாய் பெற்றால் அவரது சம்பளத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும். இப்போது 34 சதவீத DA உடன், அவர்கள் மாத சம்பளத்தில் ரூ. 6,120 (18000X34/100) உயர்வை காண்பார்கள். இந்த அகவிலைப்படியானது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் DA உயர்வால் மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடை தொகையும் அதிகரிக்கும். அதே வேளையில் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, பயணக் கொடுப்பனவு ஆகியவற்றுக்கான மாதாந்திர பங்களிப்பும் உயரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!