மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அகவிலைப்படி (DA) அதிகரிப்பு விரைவில்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அகவிலைப்படி (DA) அதிகரிப்பு விரைவில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அகவிலைப்படி (DA) அதிகரிப்பு விரைவில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அகவிலைப்படி (DA) அதிகரிப்பு விரைவில்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலகட்டத்தில், அவர்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது நிதிநிலை சீராகி வருவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.

மகிழ்ச்சி தகவல்:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருத்தம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இரண்டாவது காலம் ஜூலை முதல் டிசம்பர் வரை நீடிக்கும். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தி பரிசாக வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இதுவரை 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு தற்போது 3 சதவீதம் உயர்த்தியுள்ளதால், இனிமேல் அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரிக்கும். மேலும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் (ஜனவரி முதல் மார்ச் வரை) இதை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து ஜூலை 2022 இல் மீண்டும் அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐசிபி குறியீடுகள் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஏஐசிபி குறியீடுகள் குறைவாக இருந்தது. இதனால் மார்ச் மாதத்தில் அதிக அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்து உள்ளது. மேலும் ஜனவரி 2022 இல், ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 125.1 ஆக இருந்தது. பிப்ரவரியில் அது மேலும் சரிந்து 125 ஆகக் குறைந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் இது குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 புள்ளி ஏற்றம் ஏற்பட்டு, இது 126 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்நிலையில் ஜூலை 2022 இல் அகவிலைப்படி மூன்று சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் எண்கள் வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். இதே நிலை வரும் மாதங்களிலும் தொடர்ந்தால், 4 சதவீத அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் அமைந்துள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரவு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!