மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அகவிலைப்படி (DA) அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை 2022 மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வுத்தொகை 4% ஆக கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் மொத்த DA 38% எட்ட வாய்ப்புள்ளது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் நாட்களில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைக்க இருப்பதாக ஊடக அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பெரிய அளவில் உயர்த்தப்பட இருக்கிறது. அதாவது, மார்ச் மாதத்தில் வந்த AICPI குறியீட்டின் எண்களால் இந்த உயர்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படியை 4% என்ற விகிதத்தில் அதிகரிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்று மாதங்களுக்கான AICPI எண்கள் இன்னும் வரவில்லை.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் டிஏ உயர்வு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த அகவிலைப்படி (DA) உயர்வு 38% ஐ தாண்டலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் AICPI குறியீட்டில் சிறிது சரிவு ஏற்பட்டது. இருப்பினும், மார்ச் மாத எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் அகவிலைப்படியை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போது மார்ச் 2022 இல் குறியீடு 1 புள்ளி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த அகவிலைப்படி 4% அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!
வழக்கமாக 7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை என்ற அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2022 வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வு பரிசு கிடைத்துள்ளது. இதன் மூலம் மொத்த DA தொகை 34 சதவீதமாக இருக்கிறது. இப்போது அடுத்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த மூன்று மாதங்களில் AICPI குறியீடு உயர்ந்தால் ஜூலை 2022க்கான மொத்த DA தொகை 38% எட்ட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.