தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – மாநில செயலாளர் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தக்க ஊதியம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் ஊதியம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா குறைந்ததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் தற்போது தமிழகத்தில் கொரோனா மீண்டும் பரவி வருகிறது.
இதன் காரணமாக மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் காரணமாக தனியார் கல்வி நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – நிதிப்பற்றாக்குறை எதிரொலி!!
ஆனால் அதில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் அரசு ஊதியம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கான தக்க ஊதியத்தை வழங்கவில்லை. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர். எனவே தமிழக அரசு இது தொடர்பாக முடிவு செய்து அனைத்து தனியார் கல்வி நிறுவன ஊழியர்களும் தக்க ஊதியத்தை பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்