மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.2.30 லட்சமாக உயர்வு? கணக்கீடு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.2.30 லட்சமாக உயர்வு? கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.2.30 லட்சமாக உயர்வு? கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.2.30 லட்சமாக உயர்வு? கணக்கீடு விவரங்கள் இதோ!

மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்புகளின் படி, வருகின்ற புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கணக்கீடுகளை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

கடந்த 2020ம் ஆண்டு முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை இந்த ஆண்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு ஊழியர்களுக்கான HRA உள்ளிட்ட சில கூடுதல் கொடுப்பனவுகளும் கணிசமாக உயர்வை கண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டுமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை வருகின்ற புத்தாண்டில் உயர இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் விளைவாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.

தமிழக அரசு பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி (DA) தொகை எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும், AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களின்படி, DA தொகை 3% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு மையத் துறைகளில் இம்மாத இறுதிக்குள், பதவி உயர்வுகள் இருக்கும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், 2022 பட்ஜெட்டுக்கு முன், ஃபிட்மென்ட் காரணி குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்குரிய முடிவும் வழங்கப்படும். இது அனைத்தும் நடைபெற்றால் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அரசு முக்கிய முடிவு!

இப்போது AICPI விவரங்களின் அடிப்படையில், 2022 ஜனவரியிலும் DA தொகை 3% அதிகரிக்கப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த DA தொகை 3% உயர்ந்தால், மொத்த DA 31% லிருந்து 34% ஆக உயரும். AICPI தரவுகளின்படி, செப்டம்பர் 2021க்கான முடிவுகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இதன் மூலம் DA 32.81% கணக்கிடப்பட்டது. ஜூன் 2021 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை 2021க்கான அகவிலைப்படி 31% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணும்.

DA மதிப்பெண்களின் கணக்கீடுபடி:
  • ஜூலைக்கான கணக்கீடு– 122.8x 2.88 = 353.664
  • ஆகஸ்ட் கணக்கீடு – 123x 2.88 = 354.24
  • செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 123.3x 2.88 = 355. 104
DA 3% அதிகரிப்பு:

AICPI குறியீட்டின்படி, செப்டம்பர் 2021 வரை DA தொகை 33% ஆக உயர்த்தப்பட்டது. அதாவது, DA தொகையில் 2% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு இன்னும் வெளியிடப்படவில்லை. இது மேலும் 1% உயரும் சாத்தியம் உள்ளது. இப்போது டிசம்பர் 2021 க்குள் CPI (IW) 12 க்கு மேல் இருந்தால், DA தொகையில் 3% அதிகரிப்பு ஏற்படலாம். அதாவது, ஒட்டுமொத்த DA 3% முதல் 34% வரை உயரும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்.

34% அகவிலைப்படிகளின் கணக்கீடு:
  • DA தொகை 3% அதிகரித்த பிறகு ஊழியர்களின் மொத்த DA 34% ஆக இருக்கும்.
  • இப்போது ரூ.18000 அடிப்படை சம்பளத்தில் மொத்த ஆண்டுக்கான DA ரூ.73440 ஆக இருக்கும்.
  • இதன் மூலம் சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6480 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:
  • பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18000
  • புதிய DA (34%) – ரூ.6120/ மாதம்
  • DA இதுவரை (31%) – ரூ.5580/ மாதம்
  • DA அதிகரிப்பு – 6120-5580 = ரூ.540/மாதம்
  • ஆண்டு சம்பளம் 540 x 12 = ரூ.6480 அதிகரிப்பு
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:
  • ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ.56900
  • புதிய DA (34%) – ரூ.19346/ மாதம்
  • DA இதுவரை (31%) – ரூ.17639/மாதம்
  • 19346- 17639 = ரூ.1707 மாத அதிகரிப்பு
  • ஆண்டு சம்பள உயர்வு 1707 x 12 = ரூ .20484

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!