தமிழகத்தில் தேர்தல் பணி அதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் இதில் கடம்பூர் பேரூராட்சி தவிர்த்து மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தற்போது கொரோனா பரவல் உள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசின் புதிய செயலி!
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22ம் தேதி அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளது. இதில் தெரிவித்தாவது, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு ஊதியமாக ரூ.350 வீதம் வழங்கப்படும் அத்துடன் உணவுக்காக 300 என மொத்தமாக ரூ.2050 வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு அலுவலர்-1 பயிற்சியின் போது ரூ.250 வீதம் 3 நாட்களுக்கு ரூ.750யும் மற்றும் உணவுக்கு ரூ.300ம், தேர்தலுக்கு முந்தைய நாள் ரூ.250 வழங்க வேண்டும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முக்கிய தகவல்!
அத்துடன் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களுக்கு ரூ.250யும் என மொத்தமாக ரூ.1,550 வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு அலுவலர்-2, அலுவலக உதவியாளர் உள்ளிட்டோருக்கு ரூ.600ம் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்-3 பயிற்சி மற்றும் வாக்குபதிவின் போது ரூ.1,550 வழங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளருக்கு வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி அறிவுறுத்தியுள்ளார்.