SAI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் காலியாக உள்ள Accounts Officer (Level 7) பணிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை (24.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
SAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Accounts Officer (Level 7) பணிக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.Com / M.Com Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Accounts / Audit Department போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Level 07 ஊதிய அளவின் படி பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருப்பது அவசியமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் Tally program & MS Office போன்றவற்றில் திறன் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Accounts Officer (Level 7) பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ஓய்வு பெற்ற போது பெற்ற ஊதியம் அல்லது தேர்வு குழு பரிந்துரைக்கும் ஊதியம் மாத ஊதியமாக அளிக்கப்படும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் அல்லது தேர்வு குழுவின் பரிந்துரைப்படி தேர்வு முறை நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
SAI விண்ணப்பிக்கும் விதம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (24.05.2022) மட்டுமே கால அவகாசம் இருப்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.