கே.செல்லப்பனுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது – முக்கிய அறிவிப்பு
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்ப்பு செய்த கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சாகித்திய அகாதமி விருது:
சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,653 பேருக்கு கொரோனா உறுதி; 22 பேர் பலி – சுகாதாரத்துறை தகவல்!
நடப்பு ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை கே.செல்லப்பன் தமினிவ் மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கே.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் 1936ம் ஆண்டு பிறந்துள்ளார். இவர், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருக்குறளை இந்திமொழி பெயர்த்த டி.இ.எஸ் ராகவனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செல்லாத பணம் நாவலுக்காக கவிஞர் இமையத்திற்கும், கவிஞர் சல்மாவின் இரண்டாது ஜாமங்களின் கதையை மராட்டியத்தில் மொழி பெயர்த்ததற்காக சோனாலி நாவாங்குளுகுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.