LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பானதை தெரிந்து கொள்வது எப்படி?
வீட்டில் உபயோகபடுத்தும் கேஸ் சிலிண்டர் பாதுகாப்பானது தானா என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். கேஸ் சிலிண்டர் பாதுகாப்பானது என்பதை அறிந்துகொள்ளும்படியான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்:
பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இத்தகைய கேஸ் சிலிண்டர்கள் பாதுகாப்பவையாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்துமே சிறப்பு வகையான ஸ்டீலால் செய்யப்பட்டவை. சிலிண்டர் மூலமாக எந்தவித பாதிப்பு ஏற்படாமலும் லீக் ஆகாத வண்ணம் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப சிலிண்டர்கள் இருக்கும். ஒவ்வொரு சிலிண்டருமே பாதுகாப்பாக தான் இருக்கிறதா என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
ஒரு சவரனுக்கு ரூ.472 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
புதிய சிலிண்டர்கள் கேஸ் நிரப்பிய பிறகு 10 ஆண்டுகள் கழித்து தான் பரிசோதிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அந்த கேஸ் சிலிண்டர்களை நிரப்பும் ஆலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களால் பரிசோதிக்கப்படும். இப்படி பரிசோதித்த சிலிண்டர்கள் எந்த தேதியில் சோதிக்கப்பட்டது என்பதற்கான தேதி ஒட்டப்பட்டு சிலிண்டர் அனுப்பிவைக்கப்படும். சிலிண்டரில் A 2022 என குறிப்பிட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்க வேண்டும் என்று அர்த்தம்.
Exams Daily Mobile App Download
இது போன்று ஒவ்வொரு மாதத்திற்கான பரிசோதனை தேதி ஒட்டப்பட்டிருக்கும். சிலிண்டருக்கான அடுத்த பரிசோதனை எப்போது என்பதை தெரிந்து கொண்டு வீட்டில் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்ளலாம். அனைத்து சிலிண்டர்களும் நிரப்பப்படுவதற்கு முன்பாக அடுத்த பரிசோதனைக்கான தேதி எப்போது என்பதை சரிபார்க்கப்பட்ட பிறகு தான் நிரப்பப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் விநியோகஸ்தர்களும் பரிசோதனைக்கான தேதி என்ன என்பதை சரியாக சரிபார்த்த பிறகு தான் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.