பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் வாழ்க்கையில் நடந்த சோகம் – மனம் திறந்த போட்டியாளர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதன் மூலம் கெட்ட பெயரை வாங்கியவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்க்கை மாறியதாக நடிகர் சக்தி வாசு மனம் திறந்து பேட்டி கொடுத்து இருக்கிறார்.
நடிகர் சக்தி வாசு:
தமிழ் சின்னத்திரையில் பல மாறுபட்ட கன்டென்ட் உடன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கொடுத்து பிரபலமானது விஜய் டிவி. அந்த வகையில் பல மொழிகளில் வெற்றி பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி தொடங்கியது. முதல் சீசனில் நிகழ்ச்சி குறித்த புரிதல் மக்களுக்கு இல்லை என்பதால், இந்த நிகழ்ச்சியை கலாச்சார சீர்கேடு என ரசிகர்கள் நினைத்தார்கள். அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி எப்படி நம்மை வெளியே காட்டும் என்பது குறித்து தெரியாமல் இருந்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால் அதன் பின் 5 சீசன்கள் முடிவடைந்து ஆறாவது சீசன் தொடங்கிவிட்டது. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமானிய மக்கள் கூட தற்போது படங்களில் நடித்து பிரபலங்களாக மாறி இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் தங்களின் மரியாதையை கெடுத்து மக்களிடம் கெட்ட பெயர் வாங்கி இருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இயக்குனர் வாசுவின் மகன் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அனைவருக்கும் ஷாக்.. சன் டிவி டாப் சீரியலை விட்டு விலகிய கதாநாயகன்.. காரணம் இதுவா?
Exams Daily Mobile App Download
அதில் அவர் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். ஆனால் இதே நிகழ்ச்சி என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது. அங்கிருந்தவர்கள் என்னை வேறு திசைத்திருப்பி மன உளைச்சலை கொடுத்தனர். இதனால் எல்லா பக்கமும் கெட்ட பெயர் வந்தது தான் மிச்சம் என் வாழ்க்கையே போனது என வருத்தமாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.