சபரிமலை கோவில் பக்கதர்களுக்கான முக்கிய செய்தி – பிப்.12ம் தேதி நடைதிறப்பு!

0
சபரிமலை கோவில் பக்கதர்களுக்கான முக்கிய செய்தி - பிப்.12ம் தேதி நடைதிறப்பு!
சபரிமலை கோவில் பக்கதர்களுக்கான முக்கிய செய்தி - பிப்.12ம் தேதி நடைதிறப்பு!
சபரிமலை கோவில் பக்கதர்களுக்கான முக்கிய செய்தி – பிப்.12ம் தேதி நடைதிறப்பு!

கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை 12ம் தேதி திறக்க உள்ளது. அதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

சபரிமலை கோவில்

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜைகள் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே மாதத்தில் இரு முறை தானிய விநியோகம்!

அதனால் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 12ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த நடை திறப்பானது தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவின் முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அவர்களால் நிகழ்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இதனை தொடர்ந்து மறுநாள் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாசி மாத பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், படிபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!

இந்த சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதனால் இந்த மாசி மாத பூஜைகளில் பக்தர்களை தரிசனத்திற்கு கலந்து கொள்ள அனுமதிப்பது பற்றி இன்னும் முடிவும் எடுக்கவில்லை. மேலும் இது குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!