சபரிமலை ஆடி மாத பூஜை – இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் வழிபட அனுமதி!
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஆடி மாத பூஜைக்காக தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலை கோவில்:
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் கேரளா இரண்டாம் இடத்தை பிடித்தது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து கேரளாவில் தொற்று அச்சம் குறைந்தபாடாக இல்லை. இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெருந்தொற்று அச்சம் காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஜூலை 18, 19 & 20 ஆகிய தேதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – கேரள அரசு அறிவிப்பு!
வைகாசி மற்றும் ஆனி மாத பூஜைகளின் போதும் நடை திறக்கப்படவில்லை. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது. இதனால் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆலய தந்திரி கண்டரு ராஜூவரு முன்னிலையில் ஆலய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையைத் திறந்து வைத்து தீபத்தை ஏற்றி வைத்தார்.
ஆகஸ்ட் 1 வரை 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தொடர்ந்து பூஜைகள் ஏதும் நடக்கவில்லை. முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் இன்று முதல் ஜூலை 21ம் தேதி வரை தினசரி 5000 பக்தர்கள் வீதம் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது அல்லது 48 மணி நேரத்திற்குள் சோதிக்கப்பட்டு நெகட்டிவ் என்று அறிவிக்கப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.