சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் நாட்கள் – தேவசம் போர்டு அறிவிப்பு!
2022ம் ஆண்டு சபரிமலை நடை திறக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பினை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
சபரிமலை:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் சுற்றுலா தலங்கள் முதலியனவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உடன் கேரள மாநிலம் இயங்கி வருகிறது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் செப்டம்பர் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ உதவி – அரசு அறிவிப்பு!
எனவே செப்டம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு சபரிமலை நடை திறக்கும் நாட்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஜனவரியில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.30 முதல் ஜன.20 காலை 7:00 மணி வரை திறந்திருக்கும். மாசி: பிப். 12- 17. பங்குனி: மாத பூஜை, ஆராட்டு திருவிழா- மார்ச் 8 – 19. சித்திரை: மாத பூஜை, விஷூ ஏப்.10-18, வைகாசி: மே 14-19. பிரதிஷ்டை தினம்
தமிழக தனியார் பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் கவலை!
ஜூன் 8-9, ஆனி: ஜூன் 14-19. ஆடி: ஜூலை 16-21, ஆவணி: ஆக.16-21. திருவோணம்: செப் 6-10. புரட்டாசி: செப்.,16-21. ஐப்பசி: அக்.17-22, சித்திரை ஆட்ட திருநாள்: அக்.24-25. மண்டல பூஜை: நவ. 16- டிச.,27. அடுத்த ஆண்டு மகர விளக்குக்காக டிச.30 நடை திறப்பு. 2022ம் ஆண்டில் மொத்தம் 134 நாட்கள் நடை திறந்திருக்கும். மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். 14 நாட்கள் பூஜைகள் எதுவும் நடைபெறாது. பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 9. ஆராட்டு மார்ச் 18. மண்டல பூஜை டிச.27ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.