சபரிமலை புரட்டாசி மாத பூஜை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் – பக்தர்கள் கவனத்திற்கு!
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பக்தர்களுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சபரிமலை நடை திறப்பு :
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசின் முயற்சியாலும் தடுப்பூசிகள் விளைவாலும் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் திறக்கபடவுள்ளது.
OLA E – Scooter விற்பனை தள்ளிவைப்பு – செப்.15 முதல் தொடங்கும்! முழு விபரம் இதோ!
16 ம் தேதி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். அதன் பிறகு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை தீபாராதனை, அபிஷேகம், அரிவராசனம், நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகியவை நடைபெறும். புரட்டாசி மாத பூஜையானது செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு!
மேலும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணி முதல் தொடங்கியுள்ளது. தினமும் 15000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.