SA vs IND ஒருநாள் தொடர் – ரோஹித் ஷர்மாவிற்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமனம்? BCCI திட்டம்!

0
SA vs IND ஒருநாள் தொடர் - ரோஹித் ஷர்மாவிற்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமனம்? BCCI திட்டம்!
SA vs IND ஒருநாள் தொடர் - ரோஹித் ஷர்மாவிற்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமனம்? BCCI திட்டம்!
SA vs IND ஒருநாள் தொடர் – ரோஹித் ஷர்மாவிற்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமனம்? BCCI திட்டம்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் புதிய கேப்டனான ரோஹித் ஷர்மாவிற்கு தொடை காயம் ஏற்பட்டுள்ளது. இது சற்றும் குணமடையாத காரணத்தினால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான KL ராகுல் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ அறிவிப்பு:

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தொடை காயத்தில் இருந்து குணமடையாத பட்சத்தில் டெஸ்ட் துணை கேப்டனான KL ராகுல் இந்தியாவை வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாக தனது முதல் ஒரு ஒரு நாள் போட்டியை விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் நாளை (டிச.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாக விராட் கோஹ்லி நீக்கப்பட்டதை அடுத்து ரோஹித் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த முடிவு டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போது பிசிசிஐ தரப்பில் எடுக்கப்பட்டது. விராட் கோஹ்லியிடம் கேப்டன் மாற்றம் பற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கொடுக்காமல் முடிவு எடுக்கப்பட்டதால் அவர் ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற வதந்திகளை மறுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

தமிழகத்தில் டிச.29, 30 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஷிகர் தவான் அல்லது ருத்ராஜ் கெய்க்வாட் இருவரில் ஒருவர் தொடக்க வீரராக அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. முதல் ஒரு போட்டி ஜனவரி 19 ஆம் தேதி போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் போட்டிகள் 19 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதியில் முடிவடைகிறது. ஒரு நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!