IND vs WI: T20I அணியில் முக்கிய மாற்றம் – ருதுராஜ் கெய்க்வாட் & தீபக் ஹூடா சேர்ப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

0
IND vs WI: T20I அணியில் முக்கிய மாற்றம் - ருதுராஜ் கெய்க்வாட் & தீபக் ஹூடா சேர்ப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: T20I அணியில் முக்கிய மாற்றம் - ருதுராஜ் கெய்க்வாட் & தீபக் ஹூடா சேர்ப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI: T20I அணியில் முக்கிய மாற்றம் – ருதுராஜ் கெய்க்வாட் & தீபக் ஹூடா சேர்ப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

KL ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவரும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் T20I அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று BCCI நேற்று அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியின் போது துணை கேப்டன் ராகுலுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்:

பிப்ரவரி 16 முதல் 20 வரை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்குப் பிறகு இந்தியா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20 ஐ விளையாடுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்காமல் அகமதாபாத்தில் புதன்கிழமை ஒருநாள் போட்டியில் கலந்து கொண்ட கே.எல்.ராகுலுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தைத் தவிர்த்து விட்டு நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் மைதானத்தில் ஆக்சர் படேல் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி 3% உயர்வு!

பிப்ரவரி 9, 2022 அன்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது ராகுலுக்கு மேல் இடது தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதே சமயம் அக்சர் சமீபத்தில் கோவிட் நோய் தொற்றில் இருந்து மீண்ட பிறகு தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அவர்கள் இப்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மேலதிக நிர்வாகத்திற்குச் செல்வார்கள் ன்று பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையில், காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் துணை கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் பங்கேற்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமையான நேற்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்!

இவர்களுக்கு பதிலாக டி20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளனர். அணியின் முக்கிய வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தால் தான் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!