உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் – ரஷ்ய அமைச்சர் அறிவிப்பு!

0
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் - ரஷ்ய அமைச்சர் அறிவிப்பு!
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் - ரஷ்ய அமைச்சர் அறிவிப்பு!
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் – ரஷ்ய அமைச்சர் அறிவிப்பு!

உக்ரைன் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தினால் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா வெளியுறவகுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், இரு நாட்டின் முடிவு குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு தயார்:

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடந்து வரும் போர் அனைத்து உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் போரில் மற்ற நாடுகளின் ஆதரவு யாருக்கு என்பது கவனிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டு நாடுகளும் உக்ரைனிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. ஆனால் இந்தியா இதில் நடுநிலையில் இருக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இந்திய தூதர் ரஷ்யா அதிபர் புதின் மற்ற நாடுகளின் தலைவர்கள் சொன்னால் கேட்பாரா என்று தெரியாது. ஆனால் இந்தியாவின் பிரதமர் மோடி சொன்னால் நிச்சயம் கேட்பார்.

TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – விரைவில் முடிவுகள் வெளியீடு!

இதனால் இந்தியா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ரஷ்ய அதிபர் புதின் மற்ற எந்த நாடுகளும் உக்ரைன் விவகாரத்தில் தலையிட்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்துள்ளார். ஆனால் உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களும், ரஷ்யா ராணுவமும் சுற்றி வளைத்து தாக்குதலை தொடந்து நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்வை முழுமையாக ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. தலை நகரின் மையப்பகுதியில் இருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் மிக வேகமாக நுழைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் – ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு!

ரஷ்யா மற்றும் உக்ரைன் மீதான போர் தற்போது 2 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனின் பாதுகாப்பிற்காக தான் போரிடுவதாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தினால் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளும் போர் வேண்டாம் என்று இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!