உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை – உலக நாடுகள் அதிர்ச்சி!

0
உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை - உலக நாடுகள் அதிர்ச்சி!
உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை - உலக நாடுகள் அதிர்ச்சி!
உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை – உலக நாடுகள் அதிர்ச்சி!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான எல்லை பிரச்சனையில் போர் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து தற்போது நடந்து வரும் தாக்குதலின் மூலம் உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கைப்பற்றல்:

அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதனால் அங்கு கடந்த வாரம் முதல் போர் பதற்றம் நிலவை வந்தது. இந்நிலையில், தற்போது உக்ரைன் பகுதிகளில் தாக்குதல்நடந்து வருகின்றது. உக்ரைனின் எல்லை பகுதியில் ரஷ்யாவிற்கு ஆதரவான மக்களும், கிளர்ச்சியாளர்களுக்கு இருந்து வருகின்றனர். இவர்கள் ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? ஓமைக்ரானை தொடர்ந்து “பிஏ 2” வைரஸ் அச்சம்!

உக்ரைனை மூன்று திசைகளில் இருந்து சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு வருகின்றது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து உக்ரைனின் வடக்கு நகரங்கள் மீது ரஷ்ய விமானப்படை குண்டு மழை பொழிந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலுக்கு அதி நவீன ஏவுகணைகள் பயன்படுத்தபட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் 100க்கும் பெறப்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் சிக்கியுள்ளனர்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இந்த வார எபிசோட் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

மேலும்,உக்ரைனின் தலைநகரான கீவில் கொடைக்கானலை சேர்ந்த மாணவியுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். குண்டுகள் மழையாக பொலிந்து வருகின்றது. இந்த தாக்குதலில் அதிக அளவிலான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த பகுதிக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!