தமிழகத்தில் அக்.6, 9ம் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் – மாநில ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பேரலை காரணமாக நடத்தமுடியாமல் போன 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது உருவான கொரோனா பேரலை காரணமாக சில மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியவில்லை. அந்த வகையில் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட மாவட்டங்கள் மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 3 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கான பரிசீலனை செப்டம்பர் 23 ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் செப்டம்பர் 25 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டபடி, அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
நடிகர் சூரியின் குடும்ப திருமண விழாவில் 10 பவுன் தங்க நகை திருட்டு – விசாரணை தீவிரம்!
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 28 மாவட்டங்களில் காலியாக இருக்கும் 789 இடங்களுக்கும் அக்டோபர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் தனித்தனி IAS அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் எனவும், இதன் வாக்குப்பதிவு நடைமுறைகள் பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.