ஊரக உள்ளாட்சி தேர்தல் – தனித்து களமிறங்கும் தேமுதிக! விஜயகாந்த் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பேரூராட்சி 110வது விதியின் கீழ் நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. அதே போல சென்னையில் உள்ள தாம்பரம் 16வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெறவில்லை. மேலும் வார்டு வரையறைகள் சரியாக பிரிக்கப்படாததால் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நீட் தேர்வு அச்சம் – தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!
இந்த நிலையில் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் கடந்த மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிர நடைபெற்றது. அதனை தொடர்ந்து தொகுதி வாரியாக ஊராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டது. மேலும் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – RBI எச்சரிக்கை!
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதற்கு போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தேமுதிக தொண்டர்களும் மனுக்களை வரும் 16, 17 ஆகிய தினங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிட தேமுதிகவின் நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர் ரூ.4,000, மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 கட்டணம் என அக்கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.