தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – சிலிப் இல்லாதவர்களும் ஓட்டு போட அனுமதி!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிலிப் இல்லாதவர்களும் ஓட்டு போடலாம் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – EWS, OBC கட்ஆப் மதிப்பெண்கள் சர்ச்சை!
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு உட்பட தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவர்களுக்கு விவரிக்கப்பட்டு, கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களை எளிதில் அடையாளம் காண பூத் சிலிப் வழங்கப்படுகிறது. அவ்வாறு பூத் சிலிப் இல்லாமல் வரும் வாக்காளர்களை திருப்பி அனுப்பக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – அக்.1 முதல் தொடக்கம்!
பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அடையாள அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களை பொதுத் தேர்தலில் அனுமதிப்பதை போல, 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.