தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு – விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!
தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக திறனாய்வு தேர்வு
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் இடைவிடாது படிப்பதற்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஊரக திறனாய்வு தேர்வு வாயிலாக மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஊரக திறனாய்வு தேர்வு வருகிற டிசம்பர் 10ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 26ம் தேதி முதல் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை தலைமை ஆசிரியர் வழியே விண்ணப்பிக்கலாம். மேலும் இத்தேர்வுக்கு நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்.. அக்.25ம் தேதி விடுமுறை – வெளியான சூப்பர் தகவல்!
மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் இதற்கு விண்ணப்பிப்பதற்கான படிவத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழக அரசின் தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதே போல் மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வருகிற 28ம் தேதி முதல் நவம்பர் மாதம் 8ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.