தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – வதந்தி குறித்து விளக்கம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டில் பெண்களின் புகைப்படம் இருந்தால் தான் குடும்பத் தலைவிகளுக்கு முதல்வர் அறிவித்த உதவித்தொகை கிடைக்கும் என்ற வதந்தி மக்களிடம் பரவி வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் புகைப்படத்தை மாற்ற உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு வருகின்றனர்.
பெண்களுக்கு உதவித்தொகை:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றது திமுக.
இந்தியாவில் ஒரே நாளில் 853 பேர் உயிரிழப்பு – 46,617 பேருக்கு தொற்று உறுதி!
பிறகு முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்றதும் ரேஷன் கடைகள் மூலம் 4000 ரூபாய் நிவாரணத் தொகையை 2 தவணைகளாக வழங்கினார். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 14 வகை மளிகை தொகுப்பையும் வழங்கினார். இதனை தொடர்ந்து முதல்வர் அறிவித்த பெண்களுக்கான உதவித்தொகை பெற ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியின் படம் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது. அதனால் புகைப்படத்தை மாற்றுவதற்கு உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆன்லைன் பதிவு மேற்கொள்ளும் இ-சேவை அலுவலகத்திற்கும் பெண்கள் செல்கின்றனர். இந்நிலையில் குடும்பத் தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது குறித்து, அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது போன்ற தேவையற்ற வதந்திகளை பெண்கள் நம்ப வேண்டாம், ரேஷன் கார்டுகளில் புகைப்படத்தை மாற்ற வேண்டாம். ரேஷன் கடைகளுக்கும், அலுவலகங்களுக்கும், மக்கள் தேவையின்றி அலைய வேண்டாம். இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம் எனவும் உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தவறுறுலாக தேர்தல் அறிக்கையில் இந்த செய்தி வந்துவிட்டதோ?