LPG கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

0
LPG கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
LPG கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
LPG கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழகத்தில் சிலிண்டரின் விலை சமீப காலமாக உயர்ந்து வருகிறது. மேலும் சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேனிடம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

சிலிண்டரின் விலை:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சமையல் சிலிண்டரை ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை புக்கிங் செய்து வாங்குவதாக இருக்கும். சிலிண்டர் புக்கிங் ஆனதும் அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர்கள் தொடர்பான விதிமுறைகள் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. அது தெரியாமல் நிறைய பேர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் இது குறித்த தகவல்கள் குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

இந்த நிலையில் சமீப காலமாக தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை அதிகமாகி கொண்டே உள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாகும் வண்ணம் தற்போது மத்திய அரசு மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தி உள்ளது. அதாவது 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சமையல் எரிவாயுவின் விலை மேலும் ரூபாய் 50 உயர்ந்து விட்டது. மேலும் தற்போது வரை தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் விலை ரூபாய் 965 என்று விற்பனையானது. ஆனால் தற்போது எரிவாயுவின் விலை 1000க்கு மேல் உயர்ந்து உள்ளதால் சாமானிய பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அந்த சிலிண்டர் டெலிவரியில் பல சந்தேகங்கள் பொதுமக்களுக்கு வரும். அதாவது, சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேனிடம் கட்டாயமாக பணம் தர வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படும். இந்த கேள்விக்கு ஒரு சிலிண்டர் டெலிவரி செய்பவரிடம் கேட்ட போது, சிலிண்டரை டெலிவரி செய்வது மட்டுமே எங்களின் பணி என்றும், அதற்கும் சேர்த்து தான் நாங்கள் சம்பளம் வாங்கி வருகிறோம் என்றும், அதேபோல், சிலிண்டருக்கான டெலிவரி கட்டணம் பயனர்கள் புக்கிங் செய்த தொகையிலேயே கழிக்கப்பட்டுவிடும் என்றும், இது தவிர பயனாளர்கள் மேலும் பணம் அன்பளிப்பாக கொடுக்க நினைத்தால் தரலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஒரு சில இடங்களில் டெலிவரி மேன்கள் வாடிக்கையாளர்களிடம் மிரட்டி பணம் வாங்கி செல்கின்றனர். அவ்வாறு செய்தால் சிலிண்டர் வாங்கும் ஏஜென்சியிடம் புகார் தெரிவித்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!