சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியினை பயன்படுத்தும் விதிமுறைகள் – அரசின் அறிவுறுத்தல்!

0
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியினை பயன்படுத்தும் விதிமுறைகள் - அரசின் அறிவுறுத்தல்!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியினை பயன்படுத்தும் விதிமுறைகள் - அரசின் அறிவுறுத்தல்!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியினை பயன்படுத்தும் விதிமுறைகள் – அரசின் அறிவுறுத்தல்!

இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை அடுத்து வீடுகள் தோறும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய கொடியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று சில விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினம்:

இந்தியாவில் ஆகஸ்ட் 15 ம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடைபெற வில்லை. தற்போது நோய் பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டு சுதந்திர தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய கொடி ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசியக்கொடியினை நல்ல நிலையில் உள்ள கம்பத்தில் அல்லது நேரான உறுதியாக உள்ள கம்பில் மட்டும் பறக்க விட வேண்டும். இதை தவிர வளைந்த கம்பங்கள், இரும்பு கம்பிகள் மற்றும் குச்சிகளில் பறக்க விடக்கூடாது, சாய்வாகவும் பறக்க விடக்கூடாது. தேசிய கொடியின் மீது மலர்களையும், எந்த ஒரு பொருட்களையும் வைக்க கூடாது. மேலும் அதனை தலையணை உறையாகவோ, வாகனங்களின் பக்கவாட்டிலோ, முன்புறத்திலோ, முகக்கவசமாகவோ அணியக்கூடாது. மேலும் சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசியக்கொடியினை நாம் பயன்படுத்தக் கூடாது.

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 ஆக குறைவு – மத்திய அரசு அறிவிப்பு

Exams Daily Mobile App Download

மேலும் தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக பிற இடங்களில் பறக்க விடக்கூடாது. நம் நாடு தேசிய கொடி பிற கொடிகளுடன் பறக்கும் போது அக்கொடிகளை விட தாழ்வாக பறக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தேசிய கொடியை தலைகீழாக பறக்க விடக்கூடாது. அதேபோல் தேசியக்கொடியை சட்டையின் இடது புறம் மட்டும் குத்த வேண்டும். மேஜை விரிப்பாகவோ, ஜன்னல் திரை சீலையாகவோ பயன்படுத்த கூடாது. கொடியின் மீது நமது கால்படக்கூடாது. கொடியினை கயிறாக பயன்படுத்தக்கூடாது. இறுதியாக தேசியக்கொடியினை பயன்படுத்திய பிறகு பத்திரமாக மடித்து வைக்க வேண்டும். இவ்வாறு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!