தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அவர்களுக்கான செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு:
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு தற்போது பள்ளிகளில் 9 முதல் 11ம் வகுப்பு வரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளது. ஆனாலும் அவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்று தொடர்ந்து சந்தேகம் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாஸ்க் இல்லையெனில் இனி பெட்ரோல் இல்லை – வணிகர்கள் சங்கம் அறிவிப்பு!!
தற்போது பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்விற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி PIPETTE க்கு பதில் BURETTE அல்லது 20 மி.லி சோதனை குழாய்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மற்றொரு நாளில் நடத்தப்படும். அதேபோல் சானிடைசர் பயன்படுத்திய பின்பு எளிதில் தீ பற்றக்கூடியவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.