தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10,11,12 படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுத உள்ளனர். இந்த நிலையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது.இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.
தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இந்த நிலையில் பொது தேர்வுகளுக்கான தேதிகளும் தெரிவிக்கப்பட்டு மாணவர்களும் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் எனவும், அதன் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 10 வகுப்பு பொது தேர்வுகள் மே 10 ஆம் தேதியில் இருந்து 30 வரை நடைபெற உள்ளது. 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொது தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியிலும், 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்து இருந்தார். மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் குறித்த தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மே மாதம் இறுதி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தேர்வுகள் முடிந்த பிறகு விடுமுறையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது செய்முறைத்தேர்வுகள் கடந்த 25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பொது தேர்வுகளில் ஏதும் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட வாரியாக முதன்மை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான விதிகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது என்னவென்றால், பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர், காலணி மற்றும் பெல்ட் அணிந்திருந்தால், அவற்றை தேர்வறைக்கு வெளியே கழற்றி வைத்து விட்டு, தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிரடியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.