ஆகஸ்ட் முதல் விடுமுறை நாட்களிலும் RTGS சேவைகள் – RBI அறிவிப்பு!!
ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
NACH செயல்பாடு
ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் NACH அமைப்பு செயல்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று (ஜூன் 4) MPC அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார். அந்த வகையில் வட்டி, சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, கடன் தவணைகள், நிதி முதலீடு, காப்பீட்டு போன்றவை அனைத்தும் வங்கி விடுமுறை நாட்களில் நடைபெறும் என்று மத்திய வங்கித்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த முயற்சியின் மூலம் வங்கி விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இந்த புதிய விதியின் கீழ், குறைந்த இருப்புக்கான நிதி அபராதத்தை தவிர்க்கும் வகையில், மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் பொருத்தமான நிலுவைத் தொகையை பராமரிக்க முடியும். இதுவரை வங்கிகள் செயல்படும் நாட்களில் மட்டும் NACH செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – DPIIT அமைப்பு அறிவிப்பு!!
தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஆகஸ்ட் 1 முதல் ஒரு வருடத்தின் அனைத்து நாட்களிலும் RTGS செயல்பாடுகள் இயங்கும் என RBI தெரிவித்துள்ளது. முன்னதாக, மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி, NEFT மற்றும் RTGS போன்ற மின்னணு நிதி பரிமாற்றங்களை உருவாக்கியது. மேலும் MPC அறிவிப்பின் போது ரிசர்வ் வங்கி ஆளுநர் தாஸ் கூறுகையில், வங்கிகளின் ரெப்போ விகிதம் 4 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ வீதம் 3.5 சதவீதமும் மாறாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.