ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – RBI முக்கிய அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் சம்பளம், பென்ஷன், போன்றவை பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஆர்.பி,ஐ தெரிவித்துள்ளது.
மாத ஊதியம்:
இந்தியாவில் தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது. அதிலும் ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பினை பெற்று வருகிறது. அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் தங்களது வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்பட்டு வரும்.
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் புதிய வழிமுறைகள் இதோ!!
இந்த சேவை தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (National Automated Clearing House – NACH) என்று அழைக்கப்படும். மொத்தமாக பணம் செலுத்தும் முறையை தான் என்.ஏ.சி.எச் என்று அழைப்பர். அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ஒரே சமயத்தில் பணம் செலுத்துவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் வரவு வைக்கப்பட மாட்டாது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெள்ளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆண்டின் அனைத்து நாட்களிலும் RTGS பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் ஆண்டு முழுவதும் உள்ள அனைத்து நாட்களிலும் (விடுமுறை நாட்கள் உட்பட) என்.ஏ.சி.எச் சேவையை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.