தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நாளையுடன் (மே 18) முடிவடைய உள்ள நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
RTE மாணவர் சேர்க்கை:
இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கும் நோக்கில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும். ஆண்டுதோறும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
Exams Daily Mobile App Download
அதன்படி 2022 – 2023ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி பெற்றோர்கள் தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Office இல் தினமும் ரூ.95 முதலீடு செய்தால் 14 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் 25 % சேர்க்கைக்கு மே 25ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடிவதில்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் விரைவாக விண்ணப்பிக்க ஏதுவாக இணையதள கோளாறை சரி செய்ய வேண்டும் என்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.