தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை 10 நாட்கள் நீட்டிப்பு? இயக்குனர் கடிதம்!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி பயில மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றுடன் (0308.2021) கடைசி தேதியாகும். இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் இயக்குனர் பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் அரசு கட்டாய கல்விச்சட்டத்தின் (RTE) கீழ் 25 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில வாய்ப்பை அளிக்கிறது. இந்தாண்டு எல்.கே.ஜி முதல் 1 ம் வகுப்பு வரை 12,458 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 12,449 ரூபாயும் கல்விக்கட்டணமாக அரசு நிர்ணயித்துளளது. இந்த முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கிறது. தமிழகத்தில் மொத்தம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 5ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெற விரும்புவோர் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல் போன்ற ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,916 இடங்கள் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இதில் 700 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். விருப்பமுடையவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயில்வதற்கு மாணவர் சேர்க்கை இன்றுடன் முடிவடையும் நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் இயக்குனர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.