தமிழகத்தில் வீடுகளில் மின்சார மீட்டருக்கு மாதம் ரூ.60 வாடகை – மின்சார வாரியம் புதிய திட்டம்!
தமிழக மின்சாரத் துறை மிகுந்த கடன்சுமையில் இருக்கும் நிலையில் மின்கட்டணம் உயர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது
மின் கட்டணம் உயர்வு:
தமிழக மின்சாரத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12,647 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு பல முறை மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறது. தற்போதும் மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தால் மத்திய அரசு நிதி வழங்காது என எச்சரித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மின்சார கட்டணம் உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போது மின் நுகர்வோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் மீட்டர்களுக்கு வாடகை வசூலிக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மின் மீட்டர் டெபாசிட் அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது.
வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை – அரசின் அதிரடி உத்தரவு!
ஆனால் தற்போது மாத வாடகையாக ரூ.60 வீதம் இரண்டு மாதத்திற்கு ரூ.120 வசூலிக்க முடிவு செய்துள்ளது. இப்படி வீடுகளில் மீட்டருக்கு வாடகை வசூலித்தால் மாதந்தோறும் மின்சார வாரியத்திற்கு கணிசமான வருவாய் கூடுதலாக கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டணம் குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின்சார வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு அனுமதி கிடைத்துவிட்டால் செப்டம்பர் மாதத்தில் இருந்து மீட்டருக்கு ரூ.120 என 2 மாதத்திற்கு வாடகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.