தமிழக அரசு சார்பில் ரூ.50000 உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் கிருத்துவர், பழங்குடியினர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பரிசுடன் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் விருது:
தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து உதவி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது 2022-2023 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் கிருத்துவர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்துநிதியிலிருந்து இவ்விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு பரிசு வழங்கப்படும். அத்துடன் சேர்த்து இதற்கான நூல் வெளியிட தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற தகுதியுடையவர்கள் பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் பரிசு குறித்த விவரங்களை தமிழக அரசின் tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிசுத் தொகை பெறத குதியுடையோர் முறையான விண்ணப்பத்துடன் படைப்பினை எழுத்து வடிவிலும் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு 30.06.2022க்குள் சென்னை சேப்பாக்கத்திலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும்.