தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் – ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியதை குறித்து விரிவாக பார்ப்போம்.
முகக்கவசம் அணிதல்
தமிழகத்தில் ஓமைக்ரான் காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் பரவத் தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ExamsDaily Mobile App Download
மேலும் அண்டை நாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தினசரி ஊரடங்கில் 4 மணிநேரம் தளர்வுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!
மேலும் பொது இடங்களில் தற்போது முகக்கவசம் அணியாமல் பெரும்பாலானோர் வெளியில் சுற்றி வருகின்றனர். அதனால் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான கை கழுவுதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா பரவல் அதிகரித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.