தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம் – புதிய சிக்கல்!
தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது இத்திட்டத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதால் சர்வர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்.
சர்வர் பிரச்சனை
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அத்துடன் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தை நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1000 வரை உதவித்தொகையை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் 8, 10, 12ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள். ஆனால் இத்திட்டத்தின் கீழ் இளங்கலை படிப்பை படிக்கும் மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும். அத்துடன் முதுகலை படிப்பை படிக்கும் மாணவிகள் பயன்பெற முடியாது. இதையடுத்து தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது.
கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்…!
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக சென்று விண்ணப்ப பதிவு மேற்கோள்ள வேண்டும். இதனை வருகிற 30ம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இத்திட்டத்தில் விண்ணப்பிக்க சர்வர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தங்களால் பதிவு செய்ய முடிவதில்லை என்றும் மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த சர்வர் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.