தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தற்போது உள்ள திமுக அரசு குடும்ப தலைவிகளுக்கு அறிவித்த ஆயிரம் ரூபாயை அடுத்த நான்கு ஆண்டுகள் ஆனாலும் வழங்க மாட்டார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000:
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது இது மிகவும் ஏழ்மையான குடும்ப தலைவிகளுக்கானது மட்டுமே என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் சமீபத்தில் ஒரு வதந்தி ஒன்று பரவி வந்தது. அது என்னவென்றால், பெண்கள் முதலில் குடும்ப தலைவராக இருந்தால் மட்டுமே தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வதந்தி பரவியது. அதனை தொடர்ந்து, ஏராளமான பெண்கள் குடும்ப தலைவரின் பெயரில் இருந்து தங்களது கணவர் பெயரை நீக்கிவிட்டு தங்கள் பெயரை சேர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நிறைய இல்லத்தரசிகள் தங்கள் பெயரை ரேஷன் அட்டையில் மாற்றுமாறு அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் பேசி முடித்த பின்னர், தலைமை செயலக வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்த ஓராண்டு திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன். காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அதற்கு ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
தனியார் வங்கியில் வேலை – 12ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு || 1000 காலிப்பணியிடங்கள்..!
அதனை தொடர்ந்து, தடையில்லா மின்சாரம்,அதிலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு, தாலிக்கு தங்கம் என்னும் அற்புதமான திட்டத்தை ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த பெண்கள் கல்வியை ஊக்குவிக்க அறிவித்து செயல்படுத்தியது. ஆனால் தற்போது உள்ள திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்தது. ஆனால் அதை செய்யவில்லை என்றும், அடுத்தாக, குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் அடுத்த நான்கு ஆண்டுகளிலும் வழங்க மாட்டார்கள். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு என சொல்லி கொண்டே நான்காண்டு கடத்தி விடுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.