தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 - குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் தற்போது அந்தியோதயா, அன்னயோஜனா திட்டத்திற்காக குடும்பத் தலைவி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதனால் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.

உரிமைத்தொகை

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பெண்களுக்கென்று பல்வேறு வகையான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பெண்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த திட்டம் தமிழகத்தில் நிதி நிலையை சரி செய்த பிறகு விரைவில் தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத் தலைவி என்றிருந்தால் மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வதந்தி பரவியது. இந்த நிலையில் அந்தியோதயா, அன்னயோஜனா, முன்னுரிமை ஆகிய திட்டத்தில் ரேஷன் அட்டைகளில் ஆண்கள் குடும்பத் தலைவராக இருந்தால், பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற வேண்டும் என்று வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், ரேஷன் கார்டு நகல், மனுவில் ரூ.5 கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு!

இந்த நிலையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பொதுமக்களிடையே குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை அரசு செயல்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறதா என்ற குழப்பம் நிலவியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த நடவடிக்கைக்கும் குடும்பத்தலைவி திட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!