தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் – அமைச்சர் விளக்கம்!
தமிழக ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பது மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் உரிமைத்தொகை:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் மக்கள் மாதந்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ரேஷன் கடைகள் மூலம் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி, மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் 2 தவணைகளாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அத்துடன் இலவசமாக மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது பல்வேறு அரசியல் கட்சியினர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தாது சுட்டி காட்டி புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வாக்காளர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
TANGEDCO வில் பெண்களுக்கான வேலை – 10 வது தேர்ச்சி போதும்..!
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஓராண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் இரண்டாகப் பிரித்து, 68 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.