தமிழகத்தில் 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் – அமைச்சரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் சட்ட பேரவையில் ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
நலத்திட்டங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் கொரோனா காலம் என்பதால் அரசாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்த பிறகு பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளை பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தமிழகத்தில் முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பற்றி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – கிசான் அட்டை வழங்க சிறப்பு முகாம்!
மேலும் பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது, 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த வருடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ.18000 வரை வழங்கப்படும். இதே போல் விபத்து ஏற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1 லட்சமாக இருந்ததை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.