தினமும் ரூ.7 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.60,000 – சிறப்பான ஓய்வூதிய திட்டம்! முழு விபரங்கள் இதோ!

0
தினமும் ரூ.7 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.60,000 - சிறப்பான ஓய்வூதிய திட்டம்! முழு விபரங்கள் இதோ!
தினமும் ரூ.7 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.60,000 - சிறப்பான ஓய்வூதிய திட்டம்! முழு விபரங்கள் இதோ!
தினமும் ரூ.7 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.60,000 – சிறப்பான ஓய்வூதிய திட்டம்! முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் முதிர்வு காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற விரும்பும் நபர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பென்ஷன் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அடல் பென்ஷன் யோஜனா

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் ஓய்வூதியம் பெறும் வகையில் மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதலில் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது இந்திய குடிமகன்கள் 18 முதல் 40 வயதுடையவர்கள் வரை அனைவரும் இத்திட்டத்தில் இணையலாம்.

சந்தியாவிற்கு பாராட்டு விழா வேண்டாம் என கூறும் சிவகாமி – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.1,000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 மற்றும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மாத ஓய்வூதியம் பெற முடியும். அத்துடன் இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் தங்களின் சேமிப்பு கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் நீங்கள் 60 வயதை எட்டும் போது முடிவடைகிறது. நீங்கள் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் முடிவதற்குள் இறந்து விட்டால் உங்களின் மனைவி/கணவன் இந்த ஓய்வூதியத்தொகையை பெற முடியும்.

மேலும் இதில் கணவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் மனைவி முழு சேமிப்பு தொகையையும் பெற்று கொள்ள விண்ணப்பிக்கலாம். அத்துடன் மனைவியும் இறந்துவிட்டால் இந்த சேமிப்பு தொகை அவரின் நாமினிக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் தினமும் ரூ.7 முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியமாக பெற முடியும். இதே போல் மாதந்தோறும் 42 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.1000 வரை ஓய்வூதியம் பெற முடியும். மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் உதவி தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80C-யின்படி ரூ.2 லட்சம் வரை வரி சலுகை பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!