கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு – மத்திய அரசின் முடிவு!
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்திய அரசு அதற்கு பதில் அளித்துள்ளது.
கொரோனா பலி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையாக உருவெடுத்து மக்களை தாக்க தொடங்கியது. பின் அரசின் கடுமையான நடவடிக்கை காரணமாக 2020 இறுதியில் தொற்று தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் மக்கள் அதிர்ச்சி அடையும் வகையில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து நாட்டில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்று 1,682 பேருக்கு உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்று மிக தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது. பலர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதால் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அரசு தரப்பில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகளும் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க இருப்பதாக அருளிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் வெளியிடும்படி தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30ம் தேதி அறிவுறுத்தியது. இதற்கான பதில் மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இழப்பீடு வழங்குவதற்கான உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் படி, இழப்பீட்டை, மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து மாநிலங்கள் வழங்கும்.மேலும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.