கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்? அரசுக்கு கோரிக்கை!

0
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்? அரசுக்கு கோரிக்கை!
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்? அரசுக்கு கோரிக்கை!
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்? அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கறிஞர்கள் நிதியுதவி:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலும் காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்தனர். மேலும் பல வழக்கறிஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஜூலை 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய டெல்டா பிளஸ் தாக்கம் எதிரொலி!

அதன்படி அவர் கூறியதாவது, தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிமன்றங்களில் பெரும்பாலான நாட்கள் காணொளி வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததால் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடக்கும் நிலை இல்லை. அதாவது மூத்த வழக்கறிஞர்கள் வாத திறமைகளை நேரில் பார்த்தால், வாதி, பிரதிவாதிகளிடன் நேரடியாக பேசி அவர்களின் குறைகளை தெளிவாக கேட்கக்கூடிய நிலைமை போன்ற பல நேரடி பயிற்சிகள் பெற இயலாத நிலை உள்ளது.

பெரும்பாலுமான வழக்கறிஞர்கள் தற்போது பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2021 பிப்ரவரி சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்விழந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு உதவி அளிக்க கோரி மனு வழங்கினர். குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோர் கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மனு வழங்கினார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தமிழகத்தில் அதற்கு முன்னே சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இது குறித்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு முதற்கட்டமாக, கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்களுக்கும் உடனடியாக கொரோனா நிவாரண நிதியும், வாழ்வாதார நிதியும் வழங்க வேண்டும். மேலும், கொரோனா நோய் தொற்றால் பலியான வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!