கொரோனா இல்லாத கிராமங்களுக்கு ரூ.5 லட்சம் – மாநில அரசு அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உங்கள் கிராமத்தை கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்கிறது. ஆனாலும் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் நாடு முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
TN Job “FB Group” Join Now
அரசு ஊழியர்களும், தன்னார்வலர்களும், மருத்துவ துறையினரும், தூய்மை பணியாளர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை அளித்து இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை கிராமங்களுக்கும் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கிராமங்களில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும், மக்களின் ஒத்துழைப்பை பெறும் வகையிலும் அம்மாநில முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘வீட்டை காலி செய்யாவிட்டால் வாடகை அதிகரிப்பு’ – மாதிரி ஒப்பந்தச் சட்டத்தின் 10 அம்சங்கள்!
அதில் உங்கள் கிராமத்தை கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் மண்டலத்திற்கும், பஞ்சாயத்திற்கும் முதல் பரிசு ரூ.50 லட்சம் இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும். மகாராஷ்டிராவில் மொத்தம் 6 வருவாய் மண்டலங்கள் உள்ளன. எனவே மொத்தம் 18 பரிசுத்தொகைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.5.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.