மருத்துவர், செவிலியர்களின் ஒருநாள் உணவுக்கு ரூ.460 செலவு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மக்களை பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கான ஒரு நாள் உணவு செலவினை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.
உணவு செலவு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை, இரண்டாம் அலை என்று உருவெடுத்து தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் எதிரொலி – 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவு!!
மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் மக்களை பாதுகாக்கும் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது வரை ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரை இழந்து உள்ளனர். மேலும் ஊக்கத்தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு உணவு செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு அதிகபட்சம் ரூ.460 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.